திமுகவில் டமால் டுமீல்! வெடித்தது சர்ச்சை!

0
75

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அந்த கட்சியை பலவீனப்படுத்தும் வகையிலே பல அறிக்கைகளையும், பத்திரிக்கையாளர் சந்திப்பகளையும், நிகழ்த்துகிறார் அழகிரி.

பாஜகவில் இணைகிறார், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் இணையஇருக்கின்றார், அவருடைய மகன் தயாநிதி பாஜகவில் இணைய இருக்கின்றார், ஜனவரி மாதத்தில் புதிய கட்சியை ஆரம்பிக்க இருக்கின்றார், அழகிரி என்று பலவிதமான வதந்திகள் அவ்வப்போது வலம் வந்து கொண்டு திமுகவை அசர வைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

தென் மாவட்டங்களில் அழகிரியின் ஆதரவாளர்கள் அதிக அளவில் இருப்பதால், அழகிரியை கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு திட்டமிடுதலில் இறங்கினால், அவ்வாறான பிரச்சனைகளை தவிர்க்கவும், ஸ்டாலின் அழகிரி ரகசிய தூது விட்டு இருப்பதாக சொல்லப்பட்டது.

சமாதானமாக போவோம் என்ற அடிப்படையிலேயே, அழகிரி தன்னுடைய மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுத்து அதன் பின்னணியில் செயல்படுமாறு அழகிரியிடம் திட்டங்கள் கூறப்பட்டது.

அதோடு இல்லாமல் இதற்கு அழகிரியும் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

அடுத்ததாக அழகிரியின் மகனுக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின, அதற்கான பேச்சுவார்த்தையும் பாஜக ஆரம்பித்து இறுதி கட்டத்தை அடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தயாநிதி அழகிரிக்கு தென்மண்டல பொருப்பு கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனாலும், இந்த தகவல்கள் அனைத்துமே திமுகவை திசைதிருப்பும் ஒரு முயற்சி என்று தெரிவிக்கப்படுகிறது .தேர்தலில் தென் மாவட்டங்களில் நமது பலத்தை திமுகவிற்கு மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

ஸ்டாலின் உங்களை வழக்கம்போல கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால், கருணாநிதி திமுக என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி மீது அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒன்றாக இணைத்து மீண்டும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

விரைவில் முடிவெடுங்கள் என்று அவருடைய நெருங்கிய நண்பர்களும், ஆதரவாளர்களும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.

மு க அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும், தொடர்ந்து என்னிடம் பேசி வருவது உண்மைதான் ஆனாலும் அதிருப்தி தலைவர்கள் சிலரும் தொடர்பில் இருக்கிறார்கள் பாஜகவில் சேருவேன் என்று சொல்வதெல்லாம் உண்மை கிடையாது.

ஆதரவாளர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கருத்தை கேட்டு புதிய கட்சியை ஆரம்பிப்பதா, அல்லது வேண்டாமா, என்று முடிவு செய்வேன் வேறு எதுவும் இப்போது சொல்ல மாட்டேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அழகிரி கட்சி ஆரம்பிப்பதாக கூறுவதெல்லாம் வெறும் மிரட்டல் அவர் வேறு கட்சிக்கு செல்லமாட்டார் அதே நேரம் ஸ்டாலின் அழகிரி மீண்டும் கட்சிக்கு அழைக்கும் மன நிலையில் இப்போது இல்லை.

எவ்வாறாவது ஸ்டாலின் அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்தியாளர்களை அழைத்து திமுகவுக்கு எதிராக பேசி வருகின்றார் அழகிரி. இனி அவருடைய அரசியல் அவ்வளவுதான் என்று சொல்கிறார் தீர்க்கமாக .