பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய?… என்னப்பா சொல்றீங்க

0
78

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய?… என்னப்பா சொல்றீங்க

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.

எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை.

மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வீடியோ கிளிம்ப்ஸ் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வருகிறான் சோழன்’ என்ற கேப்ஷனோடு வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதையடுத்து கதையின் முக்கியக் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக கதையின் நாயகன் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் போஸ்டர் மற்றும், கார்த்தி நடிக்கும் வந்தியத் தேவன் லுக் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் நாவலின் மையக் கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திர லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்துள்ளது சரத்குமார் என்று சொலல்ப்படுகிறது. படத்தில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடிக்கிறார். நாவலின் படி அந்த கதாபாத்திரத்தைதான் நந்தினி மணந்துகொண்டு சோழர்களைப் பழிவாங்க சோழ ராஜ்ஜியத்துக்குள் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.