பத்திரிகையாளர்களுக்கு அதிரடி பேட்டி கொடுத்த ஜெயகுமார்! அதிர்ச்சியில் புதுச்சேரி அரசு!

0
56

புதுச்சேரி மாநிலத்தில் மீனவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அந்த சமயத்தில் ஒரு மூதாட்டி முதல் அமைச்சர் நாராயணசாமி தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் ராகுல் காந்தியிடம் அவர் மொழிபெயர்த்து தெரிவித்தபோது, தவறாக தெரிவித்தார் என்றார் அவர் நிவர் புயல் தொடர்பான தருணங்களை பற்றி பேசுகிறார் நான் அந்த சமயத்தில் அவர்களை சந்தித்தேன் என்று கூறுகின்றார். என்று அமைச்சர் நாராயணசாமி மாற்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து முதல் அமைச்சர் நாராயணசாமி விளக்கம் தெரிவித்திருக்கிறார் அதனை நான் ஒரு மூதாட்டி தெரிவித்த புகாருக்கு பதில் தெரிவித்தேன் அதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் அப்போது அவரிடம் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி ஒரு மூதாட்டியிடம் குற்றச்சாட்டையும் மாற்றி மொழிபெயர்த்து கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் தெரிவித்த ஜெயக்குமார் உங்களை போன்று நானும் கூட அதனை தொலைக்காட்சியில் பார்த்தேன், மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை அதனை தெரிந்து வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டும். எம் ஜி ஆர் கட்சி தொடங்கிய பொழுது முதலில் வெற்றியை பதிவு செய்த மாநில புதுச்சேரி மாநிலம் அதன் காரணமாக, மறுபடியும் புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைக்கும் அங்கே அதிமுக அரசு அமையும் என்று அமைச்சர் தெரிவித்தார். சசிகலா தொடர்பான கேள்விக்கு அதிமுகவின் சசிகலாவுக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.