அண்ணே என்று ஸ்டாலினை காக்கா பிடிக்கும் அதிமுக எம் எல் ஏ! கடும் கோவத்தில் இபிஎஸ்!

0
134
AIADMK MLA likes Stalin as brother! EPS in the heat of anger!
AIADMK MLA likes Stalin as brother! EPS in the heat of anger!

அண்ணே என்று ஸ்டாலினை காக்கா பிடிக்கும் அதிமுக எம் எல் ஏ! கடும் கோவத்தில் இபிஎஸ்!

அதிமுக தற்பொழுது ஒற்றை தலைமை விவகாரத்தில் நிலையற்றதாக உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர்  திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுகவில் முன்னாள் பூம்புகார் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயபாலன் சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த மூர்த்தி ஆகியோர் சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கோவை செல்வராஜ் இம்மாதம் முதலில் திமுகவில் இணைந்தார். இவர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தெரிவித்த வந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் இவர் சாதியற்ற மற்றவர்களை நிர்வாகிகளாக பொறுப்பு கொடுத்து நியமித்து வந்ததன் அதிருப்தி காரணமாக தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார்.

இவர்களை அடுத்து அந்த வரிசையில் அதிமுக எம்எல்ஏ தற்போது இணைய போவதாக சந்தேகம் எழுந்துள்ளது.ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேகே வெங்கடாசலம் இவரும் கிருஷ்ணகிரியில் கட்சி நிர்வாகிகளில் நியமனம் செய்தது அதிருப்த்தி காரணமாக ஈபிஎஸ் பக்கம் ஆதரவளிக்க ஆரம்பித்தார். தற்பொழுது ஸ்டாலினை காக்கா பிடித்து வருகிறார்.

இவர் ஓர் பொது நிகழ்ச்சியில் பேசும் பொழுது சின்னங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது, கோவை மாவட்டத்தில் வாரப்பட்டி என்ற கிராமத்தில் டிட்கோ சார்பாக ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு அங்கிருந்து நிலத்தில் தொடங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தமிழக அரசே நிலத்தை அபகரிப்பதா  எனக் கூறி அவ்வூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனின் இரண்டாம் நாள் போராட்டத்தில் சூலூர் அதிமுக எம்எல்ஏ கந்தசாமி கலந்துகொண்டு முதலமைச்சருக்கு இது குறித்து எழுதிய கடிதத்தை காட்டினார்.அந்த கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்களுக்கு என குறிப்பிட்டிருந்தது.

முன்பே சின்னங்கள் வேறு எண்ணங்கள் ஒன்றே என்று கூறியவர் தற்பொழுது ஸ்டாலினை அண்ணன் என்று பாசமாக அழைத்து இருப்பது கட்சிக்குள்ளே பேசும் பொருளாக மாறி உள்ளது. அந்த வகையில் இவர் திமுகவில் இணைந்தால் இபிஎஸ் க்கு பின்னடைவையை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.