இதை வாயில் போட்ட 2 நிமிடத்தில் அசிடிட்டி பிரச்சனை அடியோடு நீங்கும்!!

0
314
#image_title

இதை வாயில் போட்ட 2 நிமிடத்தில் அசிடிட்டி பிரச்சனை அடியோடு நீங்கும்!!

நம்மில் அனைவருக்கும் இருக்கும் வயிறு உப்புசம், வாயுத் தொல்லை, புளித்த ஏப்பம், அஜீரணக் தோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்க என்ன மருந்தை தயார் செய்ய வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.

 

நமக்கு ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறு, புளித்த ஏப்பம், அஜீரணக் கோளாறு போன்றவற்றை நீக்கும் அருமையான மருந்தான சூதக லேகியம் பற்றி பார்க்கலாம்.

 

சூதக லேகியத்தின் பயன்கள்

 

* சூதக லேகியம் உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும் இது பயன்படுகின்றது.

 

* உடலில் பல வாயுக்கள் உள்ளது. அதில் 70 வாயுக்களை வெளியேற்ற இந்த சூதக லேகியம் பயன்படுகிறது.

 

* வயிறு உப்புசமாக இருப்பதை சரி செய்கின்றது.

 

* சூதக லேகியம் நமக்கு சில சமயங்களில் ஏற்படும் புளித்த ஏப்பங்களை சரி செய்கின்றது.

 

* நமக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறுகளையும் இந்த சூதக லேகியம் குணப்படுத்தும்.

 

* தூக்கமின்மை பிரச்சனையை இது சரிசெய்யும். மன அழுத்தம் நீங்கும்.

 

* வாயுக்களினால் ஏற்படும் வலி குணமாகும். தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், இடுப்பு, மார்பு என அங்கங்கு திருகி திருகி வலி ஏற்படும். அந்த வலிகளையும் சூதக லேகியம் சரியாக்கும்.

 

* இந்த லேகியத்தை சாப்பிடும் பொழுது இருசக்கர வாகனங்களில் நாம் உட்காரும் பொழுது கால்களில் ஏற்படும் திடீர் வலியும் நீங்கும்

 

இதை பயன்படுத்தும் முறை

 

எந்த பாதிப்பும் இல்லாதவர்கள் இந்த சூதக லேகியத்தை காலையில் எழுந்தவுடன் சுண்டைக்காய் அளவிற்கு எடுத்து வாயில் போட்டு சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். அது போல இரவு நேரத்தில் சிறு நெல்லிக்காய் அளவு வாயில் போட்டு சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் சாப்பிட்ட பிறகு சூதக லேகியத்தை சிறுநெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு சுடு தண்ணீர் குடித்துவிட்டு படுத்துவிடலாம். இவ்வாறு செய்வதால் வாயுக்களினால் ஏற்படும் அனைத்துபிரச்சனைகளும் சரியாகும். .