அவையிலேயே கட்சி விட்டு கட்சி மாறிய அமைச்சர்? அதிமுக கலக்கம்! திமுக ஹேப்பி!

0
75

அதிமுக மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்றனர். திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதே போன்று அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் இன்று பதவி ஏற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், செல்வராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின். டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

அதிமுக எம்.பி. மைத்ரேயன் மாநிலங்களவையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். சக எம்.பி.க்கள் அவரை தேற்றினர். அந்த பேச்சில் தனது எதிர்காலம் குறித்து மைத்ரேயன் குறிப்பிட்டது தான் அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மாநிலங்களவையின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கெடுத்துள்ளது தனக்கு மன திருப்தி அளித்தாலும் ஒரு சம்பவம் மட்டும் முள்ளாய் உறுத்துகிறது. முன்பின் அறியாத எத்தனையோ பேருக்கு இந்த சபை இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆனால் 2009ல் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை
மவுன அஞ்சலியும் செலுத்தப்படவில்லை.

எனவே என் வாழ்வின் முடிவுக்குப் பின் எனக்காக இரங்கல் தீர்மானமோ மவுன அஞ்சலியோ இந்த சபையில் வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இதற்குப் பிறகு மைத்ரேயன் பேசியதுதான் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. நீண்ட அனுபவத்திற்கு பிறகு மாநில அரசியலுக்கு திரும்ப உள்ளேன். பார்லிமென்ட்டைப் பொறுத்த வரை இது எனக்கு அஸ்தமன நேரம். ஆனால் மாநில அரசியலில் இனிமேல் தான் “சூரியயோதயம்” ஆரம்பிக்கப்போகிறது என்று மைத்ரேயன் தெரிவித்தார்.

அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு உறுதுணையாக இருந்து டெல்லியுடன் நெருக்கம் காட்டியவர் தான் மைத்ரேயன். ஆனால் அணிகள் இணைந்த பிறகு மைத்ரேயன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டார். ஓபிஎஸ்ம் அவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை
மக்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். மாநிலங்களவையிலாவது மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.
இதையடுத்து தான் அவரது எண்ணங்கள் மாறத் தொடங்கிவிட்டாக அதிமுகவினர் கூறுகின்றனர். இந்நிலையில்தான் தனது வாழ்வின் சூர்யோதயம் குறித்து அவர் பேசி தனது முடிவை உணர்த்தியுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : இவர்களா அந்த இரண்டு அமைச்சர்கள்? சிலை கடத்தல் தொடர்புடையவர்கள்! பொன் மாணிக்கவேல் கூறுவது இவர்களையா?

“சூரியோதயம்” என குறிப்பிட்டது திமுகவின் உதய சூரியன் சின்னத்தை கூறுகிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை திரு மைத்ரேயன் தான் கூறவேண்டும். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K