அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பறிக்கப்படும்!! ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!!

0
207
Adichan Baru Appointment Order !! One member of the family will be deprived of a government job !! Cumulative praise for Stalin !!
Adichan Baru Appointment Order !! One member of the family will be deprived of a government job !! Cumulative praise for Stalin !!

அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்!! குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பறிக்கப்படும்!! ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு!!

தமிழகத்தின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அந்த நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கண்ட பொதுமக்கள் முதலமைச்சரை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

 

முதலமைச்சரின் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை என்ற திட்டத்தின் கட்டுப்பாடுகள்:

1.இத்திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி இரண்டு பேர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளபடும்

2. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு கட்டாய அரசு வேலை வழங்கபடும்

3. ஏற்கனவே கணவன் மனைவி இரண்டு பேரும் அரசு பதவியில் இருந்தால், யாராவது ஒருவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஒருவர் பதவி பறிக்கப்படும் . ராஜினாமா செய்தவர்கள் தனியார் துறையில் வேலை செய்யலாம். அவர்கள் அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என நினைத்தால், அதற்கு அரசும் சம்மதித்தால் அவருக்கு contract சம்பளம் Rs. 10, 000 மட்டுமே வழங்கபடும்.

4. திருமணம் ஆகாத, ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்ய நினைத்தால், அவர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அது சட்டபடி குற்றம்

5. இத்திட்டத்தின் படி குறைந்தது ஒருகோடிக்கு அதிகமான சொத்து உள்ள குடும்பங்களுக்கு அரசு வேலை கிடையாது. அவர்கள் PAN Card, Income tax விவரங்களை அரசு சோதனை செய்யும்.

6. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய அரசு ஊழியர் என்றால், நல்ல ஊதியம் பெறுபவர் என்றால் மற்றவருக்கு மாநில அரசு வேலை கிடையாது.

7. இத்திட்டத்தின் படி எந்த ஒரு நபரும் , வேலைக்கு சேர்ந்தது முதல் 30 வருடம் மட்டுமே அரசு வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் குற்றம்

8. ஏற்கனவே அரசு பதவியில் இருப்பவர்கள் வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுவார்கள். அவர்கள் சொத்து மதிப்பு ஒருகோடிக்கு மேல் இருந்தால் அது குற்றம். மற்றும் பதவி பறிக்கப்படும்

9. இதன்படி புதிதாக அரசு வேலைக்கு ஆள் எடுக்கும் போது தற்போதுள்ள கல்விதகுதி, உடற்தகுதி, எழுத்துதேர்வு தகுதி, ஜாதி தகுதி, பிற சிறப்பு தகுதி(வாரிசு தகுதி, தனியார் துறை அனுபவம், விளையாட்டு வீரர்கள்… ) மட்டும் இல்லாமல் கீழ்கண்ட புதிய தகுதியும் கணக்கில் கொள்ளட்டும்.

 

 

a. ஒருகோடிக்கு மேல் குடும்ப சொத்து அல்லது வருமானம் இருக்ககூடாது.

b. குழந்தைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

c. இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

d.ஏற்கனவே கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய மாநில அரசு வேலையில் இருந்தால் மற்றவர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதே குற்றம்

e. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

f. வேலைக்கு சேர்ந்தவர்கள் எந்தெந்த தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் ஒளிவுமறைவின்றி தனியாக வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியபடுத்த படும்.,

g. ஒப்பந்த தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை பெண்களுக்கு முன்னுரிமை

இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கீழ்கண்ட் நன்மைகள் நடைபெறும்

A. குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும்.

B. சமூகத்தில் குற்றங்கள் குறையும்

C. குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை செய்யும்போது அரசின் மற்ற திட்டங்களை மிக எளிதாக அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியபடுத்துவார்

D. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்பதால் , அரசியல் மற்றும் பண பலத்தால் ஒரே குடும்பத்தில் அதிக அரசு வேலை பெறுவோர் வேலை பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு வழங்கப்படும்.

E. பணக்காரர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வு மகிழ்ச்சியாகும்

F. திருமணம் ஆகாத அரசு ஊழியர் இரண்டு பேர் திருமணம் செய்யும் போது யாராவது ஒருவர் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அந்த வேலை இன்னொரு குடும்பத்திற்கு கிடைக்கும்.

G. குழந்தைகள் உள்ளவர்களுக்கு புதிதாக அரசு பணியில் முன்னுரிமை என்பதால் அந்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகும்

H. 30 வருடத்திற்கு மேல் அரசு பதவியில் இருக்ககூடாது என்பதால் வீணாக அரசு அதிகார சுகத்தை அனுபவிப்பவர்கள் பதவி பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு கொடுக்கபடும்

I. இதன்மூலம் தனியார் துறையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்யும் ஏழை, நடுத்தர குடும்ப உறுப்பினர்கள் பலகோடி பேருக்கு அரசு வேலை கிடைக்கும்.

J. இதன் மூலம் இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

K. ஏற்கனவே உள்ள தகுதியோடு கூடுதலாக சில தகுதிகளை சேர்த்துள்ளதால் சமுக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தந்த சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும்

L. கிராமத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

M. எந்தெந்த தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்ற விவரம் வெப்சைட்டில் வெளியிடுவதால் அரசை ஏமாற்றி யாரும் அரசு வேலையில் தரமுடியாது. அப்படி சேர்ந்தாலும் அவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்க முடியும். ,

N. ஒப்பந்த தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை வாழ்வு வசந்தமாகும்

இது போன்ற கட்டுபாடுகளுடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என  வாட்ஸ்அப், பேஸ்புக்  போன்ற  சமூக வலைத்தளங்களில்  பார்வோர்ட் மெசேஜ்  வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது குறித்து திமுக கட்சி சார்பிலோ அல்லது தமிழக அரசு சார்பிலோ எந்த ஒரு அறிக்கையும் அதிகாரபூர்வமாக  வெளிவிடவில்லை.  இது போன்ற வதந்திகள் பெரிதும் வைரலாகி வருகிறது எனவே இதை மக்கள் நம்ப வேண்டாம்.

author avatar
Preethi