மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

0
66

மைக்கை பிடித்தவாறு அதுல்யா ரவி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அதுல்யா ரவி அடிப்படையில் தமிழகத்தின் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் சமூக வலைத்தளமான டப் மாஸ் மற்றும் குறும்படங்கள் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் இயக்குனர் சமுத்திரகனியின் மூலமாக ஏமாளி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின்னர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவரின் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து ஏமாலி, சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் 2,எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர் கேப்மாரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சிக்கு தாவினார்.இதனையடுத்து வெளியான படங்களில் அவர் தாராளமாக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார்.

நடிகைகள் வழக்கமாக சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.அதுவும் இந்த கொரோனா பாதிப்பு காலத்தில் பொழுது போக்கிற்காக அவர்கள் செய்வதை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வழக்கத்தை விட அதிக நேரத்தை இங்கு செலவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைக்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

https://www.instagram.com/p/CJf5t0-BgBq/?igshid=ohgnbu3d8v6u

 

அவர் வெளியிட்டுள்ள இந்த படத்தில் பிளாக் கலர் டிரஸில் மைக்கை பிடித்தவாறு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.