உடலுறவில் காண்டம்க்கு பதிலாக ஆணின் அந்தரங்க பகுதியில் தடவிய பிசின்! கடைசியில்!

0
109

25 வயது ஆண் ஒருவர் தனது காதலியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது எந்த விதமான காண்டம் அணியாமல் பெண் கர்ப்பம் ஆகாமல் இருப்பதை தடுப்பதற்காக ஆண் தனது அந்தரங்க பகுதியில் பிசின் ஒட்டிக்கொண்டு அது அவருக்கே உயிரை பறித்த சம்பவம் தான் குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது.

தகவல்களின்படி, இறந்த இளைஞர் சல்மான் மிர்சா (25), அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவரும் அவரது காதலியும், போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது, ஜூன் 22 அன்று நகரின் ஜுஹாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று உள்ளனர். இருவருடனும் ஒரு பெண் உடன் இருந்து உள்ளார்.

மிர்சா மற்றும் அவரது முன்னாள் காதலியாக இருந்த அவரது காதலி, போதைப்பொருளை உட்கொண்டு உள்ளனர். பின்னர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர் “அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், அவள் கர்ப்பமாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மிர்சாவின் அந்தரங்கப் பகுதிகளில் பிசின் தடவ முடிவு செய்து உள்ளனர். அவர்கள் அவ்வப்போது ஒயிட்நெர் கொண்டு கலவையை பயன்படுத்தி உடலுறவு மேற்கொண்டு உள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த நாள், மிர்சா அம்பர் டவர் அருகில் மயக்க நிலையில் காணப்பட்டு உள்ளார். அவரை அறிந்த ஒரு நபர் அவர் புதர் ஓரம் மயங்கி கிடப்பதை பார்த்து அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை அருகில் உள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து உள்ளனர்., ஆனால் மிர்சா சிகிச்சை பலன் இன்றி இறந்து உள்ளார்.

ஜூன் 25 அன்று, இறந்த இளைஞரின் உறவினர் ஒருவர் சாய்ரபானு மிர்சா போலீசில் புகார் அளிக்க வந்துள்ளார். இதையடுத்து, விபத்து மற்றும் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உடல் உறவின் போது பிசின் பயன்படுதியதே இளைஞரின் உடல்நலத்தை சிக்கலாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் விளைவாக மிர்சா இறந்துள்ளார் என அந்த வழக்கை விசாரித்த போலீசார் தெரிவித்துள்ளார்.

தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இறந்தவரின் உள்ளுறுப்பு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று டிசிபி பிரேம்சுக் டெலு கூறி உள்ளார்.

author avatar
Kowsalya