அதிமுக புறம்போக்கு நிலமல்ல! சசிகலாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி!

0
65

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைக்குப் பிறகு வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதிமுக தலைமைக்கு வழிவிட்டு சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கினார். அதன் பிறகு திடீரென்று அதிமுக தொண்டர்கள் இடம் உரையாற்றிய ஆடியோக்கள் சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டது. அதோடு அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று தெரிவித்ததுடன், பொதுச்செயலாளர் என்று தெரிவித்துக் கொண்டு தற்போது மிகத்தீவிரமான சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டு வருவதோடு, அறிக்கைகளையும் சசிகலா வெளியிட்டு வருகிறார். அதிமுகவை மீட்டெடுப்பது குறித்த சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஜெயக்குமார், உள்ளிட்டோர் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்கள். அதிமுக கொடி மற்றும் பொதுச் செயலாளர் என்று கூறிவரும் சசிகலா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு நடுவில் சசிகலாவுக்கு ஆதரவாக உரையாற்றும் நபர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவின் தலைமை ஈடுபட்டு வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா அண்மையில் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியில் உட்கட்சி தேர்தலை சமீபத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். அதில் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஜெயச்சந்திரன் சசிகலாவின் தூண்டுதலின் பெயரிலேயே வழக்கு தொடர்ந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு விதத்தில் அதிமுகவை மீட்பது குறித்து தொந்தரவு செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில், எங்கள் கட்சி, எங்கள் உரிமை, எங்கள் குடும்பம், எங்களுக்கு இலையுதிர் காலம் இல்லை எப்போதும் வசந்த காலம் தான் என்று விந்தியா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நடிகை விந்தியா வெளியிடட வலைதள பதிவில் ஒரு சில எலிகள் புலிகள் வேஷமிட்டு எகத்தாளம் செய்கின்றது, மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலம் அல்ல இது புரட்சித்தலைவர் உருவாக்கிய, புரட்சித்தலைவி தன்னுயிரை உரமாக்கிய சொத்து. இது எங்கள் கட்சி, எங்கள் உரிமை, எங்கள் குடும்பம் எங்களுக்கு இலையுதிர் காலம் இல்லை எப்போதுமே வசந்த காலம் தான் என்று இந்தியா தெரிவித்திருக்கிறார். இந்த பதிவு அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும் சசிகலாவின் மறைமுகமாக தாக்குவதாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.