சமந்தா செய்த அந்த செயலால் கடுப்பான ரசிகர்கள்

0
78

தமிழ் மற்றும் தெலுங்கு அழகிய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதல் செய்து திருமணம் செய்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு நடந்தது முதல் அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே தங்கி இருந்த சமந்தா தன்னுடைய வீட்டில் இருந்தபடியே சிறிய அளவிலான முட்டைக்கோசை வளர்த்து அறுவடை செய்திருக்கிறார். அதன்பின்பு நாய் குட்டிகள் உடன் ஒன்றிணைந்து அவர் விளையாடிய காணொளி மற்றும் யோகா புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுடன் ஒன்றிணைந்து இருந்து வருகிறார் சமந்தா.

இவ்வாறான சூழ்நிலையில், தற்சமயம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய படுக்கை அறையில் படுத்தபடியே மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறது. திரைப்படங்களில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்மணியாக நடித்து வரும் சமந்தா அவர்களை இவ்வாறு பார்ப்பதற்கு பிடிக்கவில்லை என்று அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகிறார்களாம்.முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்சமயம் சமந்தா மிகவும் கவர்ச்சியுடன் நடித்து வருகிறார். அவருடைய பிகினி பிக்சர் விரைவில் வெளியிடப்படலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.