“வாழ்க்கையிலேயே முதல் முறையாக பொறாமைப்படுகிறேன்…” நடிகை மீனாவின் பொன்னியின் செல்வன் பதிவு!

0
84

“வாழ்க்கையிலேயே முதல் முறையாக பொறாமைப்படுகிறேன்…” நடிகை மீனாவின் பொன்னியின் செல்வன் பதிவு!

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் பாகம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

படத்தைப் பற்றி திரையுலக பிரமுகர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் ட்வீட்களாக பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா பொன்னியின் செல்வன் குறித்து பகிர்ந்த பதிவு ஒன்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நந்தினி வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தைப் பகிர்ந்து “இனிமேலும் என்னால் அதை சொல்லாமல் இருக்க முடியாது. வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஒருவரை பார்த்து பொறாமைப்படுகிறேன். ஏனென்றால் என்னுடைய கனவு வேடமான நந்தினி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.” என்று கூறி பதிவிட்டுள்ளார். நந்தினி கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று. எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட அந்த பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.