கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்!

0
87

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்!

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கோயிலுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று பேசிய நடிகை ஜோதிகாவிற்கு இணையம் முழுக்க எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழாவில் கலந்துகொண்டு கோயிலை பற்றி ஜோதிகா பேசிய வீடியோ சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகை ஜோதிகா கூறியதாவது; தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. நான் ஏற்கனவே பார்த்த உதய்பூர் அரண்மனை போலவே உள்ளது. அப்போது எனக்கு அங்கு இருந்த மருத்துவமனையில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. மருத்துவமனைக்கு நான் சென்றபோது அது சரியாகப் பராமரிக்கப்படாத நிலையில் மிக மோசமாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.

மருத்துவமனையை பார்த்த பிறகு நான் கோவிலுக்கு போகவில்லை. பள்ளிகளும், மருத்துவமனைகளும்தான் முக்கியம். கோயில்களுக்கு செய்வது, உண்டியலில் காசு போடுவதை விட மருத்துவமனைகளை பராமரிக்கவும் பணம் கொடுங்கள் என்று நடிகை ஜோதிகா மேடையில் கூறியிருந்தார்.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு இணையத்தில் மற்றும் பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது. ஜோதிகாவின் வீடியோவை பகிர்ந்து அவரது குடும்பத்தினரையும் விமர்சித்து வருகின்றனர். அக்கறையோடு பேசும் ஜோதிகாவுக்கு பல நெட்டிசன்கள் கேள்வியுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை ஜோதிகாவுக்கு 5 கோடியில் வீடு எதற்கு.? ஒரு கோடியில் கார் எதற்கு.? 300 கோடிக்கு சொத்து எதற்கு என்றும் மேலும் ஜோதிகாவை விமர்சித்து “குந்தவை” என்கிற இணைய ஐடியில் ஒருவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் ,கோயிலுக்கு இவ்வளவு செலவு செய்து பெயிண்ட் அடிக்கனுமா.? என்று கேள்விகேட்கத் தெரிந்த ஜோதிகாவுக்கு இந்த விருது விழாவுக்கு செலவு செய்த பணத்தை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுக்கச் சொல்லி இருக்கலாமே.? என்றும் சிலர் விமர்சனம் வைத்துள்ளனர். நடிகை ஜோதிகா இன்னும் வெளியுலகத்தை முழுமையாக அறியவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு ஒரு விழாவின் போது நடிகர் சிவகுமாருடன் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது போனை தட்டிவிட்ட சம்பவம் இணையத்தில் சர்ச்சையாக பேசப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் கோயிலை பற்றி பேசியதால் நடிகர் சிவகுமார் குடும்பம் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது.

author avatar
Jayachandiran