நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்!

0
86
Actor's body cremated with state honors! Heavy-hearted public!
Actor's body cremated with state honors! Heavy-hearted public!

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்!

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திகழ்பவர் பவர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். இவருக்கு வயது 46 மட்டுமே. அவரது இந்த மரணத்தை, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், மற்றும் கன்னட மக்கள் யாராலும் நம்பமுடியவில்லை. அனைவரையும் மிகவும் சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

அது மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும், அவரது மரணம் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னடம் உள்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை விக்ரம் மருத்துவமனையில் அவசர கதியாக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு  அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள் மக்கள் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பல மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். அதை பார்க்க ரசிகர்கள் பலர் ஒன்றாக கூடி, மிகவும் கூட்டமாக அவருக்கு மரியாதை நிமித்தமாக சேர்ந்தனர் என்றுதான் நினைக்க முடிந்தது.
இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் பல நேரங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த வேண்டி அவ்வப்போது போலீசார் தடியடி நடத்தினர்.
இருப்பினும் பலரும் கடும் குளிரையும், பொருட்படுத்தாமல் விடிய, விடிய மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்தும் வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அங்கு குவிந்திருந்தவர்கள் பலரும் அப்பு,அண்ணா என்று கண்ணீர்விட்டு கதறினர்.
மேலும் பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்திய படியும் வந்து அஞ்சலி செலுத்தினர். அவ்வப்போது லேசான மழையும் பெய்தபடி இருந்தது. ஆனாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்ற அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.
அமெரிக்காவில் இருந்த அவரது மகள் ஸ்ருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மீண்டும் மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி கதறி அழுதார். இது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சியில் அதை நேரலையில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களின் கனத்த நெஞ்சங்களை உருக்குவதாக இருந்தது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் வந்து, புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட மந்திரிகள் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஸ்ரீகாந்த், அலி, தமிழ் நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், பிரபுதேவா, நடிகைகள் ரம்யா, சுமலதா எம்.பி., ராதிகா குமாரசாமி, பவித்ரா லோகேஷ், ரஷிதா ராம், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பல்வேறு நடிகர்-நடிகைகளும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.