நடிகர் சூரிக்கு வந்த சோதனை! அதிருப்தியில் படக்குழு!

0
75

தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படம் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்ததாக சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

காமெடி நடிகரான சூரி, இயக்குனர் பாரதிராஜா, இருவரும் ஒரு முக்கிய வேடங்களில் நடிக்க வெற்றிமாறன் இயக்க இருக்கும் படத்தில் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடந்து கொண்டிருக்கின்றது. சத்தியமங்கலத்தில் மிகப்பெரிய செட் அமைத்து முழு படமும் அந்த காட்டுக்குள்ளேயே தயாராக இருக்கின்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையப்படுத்திதான் இந்தப் படத்தை இயக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன் .

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. இந்தத் திரைப்படத்தின் காட்சிகளில் இரண்டு நாட்கள் நடித்த சூரி உடனடியாக சென்னை கிளம்பிவிட்டார். கோபித்துக் கொண்டு கிளம்பினாரா? என்று கேட்டால்? அப்படி எதுவும் கிடையாது அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ,ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் ஆரம்பித்து நடந்து வருகின்றது. ஹைதராபாத்தில் இருக்கின்ற ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது அந்த திரைப்படத்திலும் சூரி நடித்து வருகின்றார்.

ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக தான் வெற்றிமாறன் திரைப்படத்திலிருந்து பாதியில் கிளம்பி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சரி இதில் என்ன பிரச்சனை என்று கேட்டால், அண்ணாத்த திரைப்படத்தில் சூரிக்கு தாடியுடன் கூடிய கெட்டப் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் தாடி மீசை இல்லாத கிளின் சேவ் கெட்டப் அண்ணாத்த பட படப்பிடிப்பு இப்போதைக்கு ஆரம்பிப்பது கடினம் என்று வெற்றிமாறன் படத்திற்கு தயாராகிவிட்டார் நடிகர் சூரி. அதற்காக உடல் எடை மற்றும் கெட்டப் என்று அனைத்தையும் மாற்றி இருக்கின்றார்.

தற்போது, ரஜினி திரைப்படத்தில் இருந்து அழைப்பு வந்து இருக்கின்றது, என்று செல்கிறார்கள். சூரிக்காக ரஜினியின் படப்பிடிப்பு தள்ளிப் போகவோ அல்லது நிறுத்தவோ முடியாது ஆனால் வெற்றிமாறன் திரைப்படத்தை நிறுத்தி வைக்கலாம். எனவே உடனடியாக புறப்பட்டு ஹைதராபாத் செல்கின்றார் நடிகர் சூரி. ஆனாலும் மீசையில்லாத கெட்டப் படக்குழுவிற்கு வேறு வழியும் கிடையாது. என்ற காரணத்தால், ஒட்டு தாடி வைத்து நடிக்க செய்து விடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.