பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

0
61

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

திருச்சி கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று வசனம் பேசியுள்ளார்.

நான் சினிமாவில் வளரக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்கள். தற்போது அந்த தடைகளை மீறி வெளியே வந்துள்ளேன். நான் ஏன் கோபப்படுகிறேன் என்றும் விளக்கத்துடன் மேடையில் கூறினார். எல்லாவற்றையும் தாண்டி தனது ரசிகர்கள் மீது வைத்துள்ள அதிகபட்ச அன்பால்தான் சமூக வலைதளங்களில் தன்னை வச்சு செய்வதாக தன்னையே கலாய்த்து பேசினார்.

பெண்களுக்காக குரல் கொடுப்பேன் என்று பேசிய இதே நடிகர் சிம்புதான் பெண்களுக்கு எதிரான பீப் பாடலை பாடி வெளியிட்டார். அந்த சர்ச்சை மாதர் சங்கம் வரை இழுத்துச் சென்றது. மேலும் தனது சினிமா படங்களில் பெண்களுக்கு எதிரான பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Jayachandiran