நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

0
229
#image_title

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித் குமார், தன்னுடைய அசாத்திய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார்.

நடிகர் அஜீத் குமாருக்கு தனது தந்தை மீது எப்போதும் அளவு கடந்த பாசம் உண்டு, இந்த நிலையில் இன்று அதிகாலை நன்றாக உறங்கி கொண்டிருந்த அவர் திடீரென மரணமடைந்தார் . தனது தந்தையின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாத அஜித் குமார் மிகவும் மனம் வருந்தி கண்கலங்கினார்,

இதனை தொடர்ந்து தமிழ் திரையுலக நடிகர்கள் ஏராளமானோர் அவரது இல்லத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்தி வந்தனர், மேலும் இது தொடர்பாக பல அரசியல் முக்கிய பிரபலங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்,

இறந்த நடிகர் அஜித்குமார் தந்தையின் இறுதி சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது, இறுதி சடங்குகள் நடைபெறும் முன் தனது தந்தையின் பூத உடலை சுமந்து சென்ற அஜித்குமார் கண் கலங்கியவாறு சென்றது காண்போரை கண்கலங்க செய்தது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணத்திற்கு தமிழகத்தின் முக்கிய பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர், தங்களது குடும்பத்தில் நிகழ்ந்த இந்த துக்க நிகழ்ச்சியை அனைவரும் புரிந்து கொண்டு இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.