அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

0
226
#image_title

அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!

நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குடும்ப அட்டைகள் மூலம் அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த குடும்ப அட்டையின் மூலமாக ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரொக்க பணம், கரும்பு, பச்சரிசி மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இவ்வாறான இலவசங்கள் தேவையில்லை என்று கருதும் வசதியான குடும்பங்களுக்கு கௌரவ அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் அரசால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் விவரங்களை பெற 9442194480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K