மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
174
Aadhaar number not linked to electricity connection? Important announcement made by Minister Senthil Balaji!
Aadhaar number not linked to electricity connection? Important announcement made by Minister Senthil Balaji!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் அதிகரித்தது. அதனை தொடர்ந்து மின் நுகர்வோருக்கும் மின் மானியமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் இந்த பணி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக தமிழகம் முழுவதும் 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டது.

இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை அதனால் கூடுதல் காலவகாசம் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை காலவகாசம் வழங்கப்பட்டது. மேலும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலவகாசம் நீட்டிக்கப்பட்டது. நேற்று மாலையுடன் அந்த காலவகாசம் முடிவடைந்தது.

நேற்று மாலை வரை 2.59 கோடி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் எண்ணுடன் இணைத்துள்ளனர்.  சுமார் 7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. அதனால் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 2 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அவகாசம் நீட்டிக்கபட்டதிற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளால் தான் நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இனியும் அவகாசம் வழங்கப்படமாட்டாது என கூறியுள்ளார்.

author avatar
Parthipan K