சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்!

0
160
A young woman committed suicide in Thalivasal area of ​​Salem district! This is the reason!
A young woman committed suicide in Thalivasal area of ​​Salem district! This is the reason!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பொன்னியம்மன் கோவில் திருவை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திர டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உத்ரா (24) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உத்ரா நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் பொழுது அவரது மனைவி தூக்கில் இந்நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்ஜோதி மனைவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். உத்ராவை பரிசோதனை செய்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனவும் கூறினார். இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவல் போலீசார் உத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து உத்ராவின் தந்தை பழனிமுத்து தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளில்  தற்கொலை செய்து கொண்டதால் ஆத்தூர் உதவி கலெக்டரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

author avatar
Parthipan K