வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

0
79

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

2022 ஆகஸ்ட் 15 -ல் நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்கள்கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி பலரும் அவர்களது வீட்டில் இந்தியாவின் தேசிய கொடியை பறக்க விட்டு மகிழ்ந்து வரும் நிலையில்,உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன்பு பாகிஸ்தானின் கொடியை பறக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில்,
காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

author avatar
Pavithra