மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!!

0
115
a-wonderful-event-that-happened-like-the-movie-minnal-murali-a-woman-who-survived-a-lightning-strike-got-a-rare-power
a-wonderful-event-that-happened-like-the-movie-minnal-murali-a-woman-who-survived-a-lightning-strike-got-a-rare-power

மின்னல் முரளி திரைப்படம் போல் நடந்த அதிசய நிகழ்வு!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு கிடைத்த அபூர்வ சக்தி!!

நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னள் முரளி படத்தைப் போல அமெரிக்காவில் பெண் ஒருவர் மின்னல் அடித்து உயிர் பிழைத்துள்ளார்.மேலும் அவருக்கு அபூர்வ சக்தி ஒன்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.கிம்பர்லி க்ரோன் அவர்களுக்குத்தான் மின்னல் தாக்கி அபூர்வமான சக்தி கிடைத்துள்ளது.

கிம்பர்லி க்ரோன் 2009ம் ஆண்டு தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.மின்னல் தாக்கியதில் கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது சமையலறையின் கூரையில் இருந்த ஒரு விளக்கின் வழியாக மின்னல் ஊடுருவி கிம்பர்லி க்ரோன் அடுப்பில் சமைக்க வைத்திருந்த எண்ணெய்க் கடாய் மீது பாய்ந்து அந்த கடாயை மின்னல் தூக்கி எரிந்தது.அதன் பிறகு அதிலிருந்து வெளியான மின்னல் கிம்பர்லி க்ரோன் மார்பகத்தில் நேரடியாக தாக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த மின்னல் தாக்கியதில் அதிர்ஷ்டவசமாக கிம்பர்லி க்ரோன் அவர்கள் உயிர் தப்பினார்.மின்னல் தாக்கியதில் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த இவருக்கு பாய்ந்த மின்னல் 1200 ஸ்ட்ரைக்குகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மின்னல் தாக்கிய கிம்பர்லி க்ரோன் அவர்களுக்கு அசாதாரண திறன் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது புயல் உருவாவதற்கு முன்னரே அறியும் திறன் தனக்கு மின்னல் தாக்கியதில் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.அது மட்டுமில்லாமல் புயல் மேகங்கள் சூழும் பொழுது தனது மார்பகத்தில் இறுக்கமான உணர்வு ஏற்படுவதாக கிம்பர்லி க்ரோன் தெரிவித்துள்ளார்.

இதைப் போலவே நடிகர் டோவினோ தாமஸ் நடித்த மின்னள் முரளி திரைப்படத்திலும் நடிகர் டோவினோ தாமஸ் அவர்களுக்கும் அதில் நடித்த குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் மின்னல் தாக்கி அபூர்வ சக்திகள் கிடைப்பது போல காட்சிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.