நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
108
A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!
A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

மேலும் அந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து கிரேன்மீது மோதியது. அந்த லாரி மோதியதில்  கிரேன் வாகனம் கவிழ்ந்து விழுந்தது  அதிலிருந்து இருவரும் படுகாயம் அடைந்தனர்இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில்  குமாரபாளையம் போலீசார் சம்பாவ இடத்திற்கு வந்து லாரி ஓட்டுனர் உள்ளப்பட  மூவரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தினர் அந்த விசாரணையில் லாரி ஓட்டுநர் நாமக்கல் கருமானூரை சேர்ந்த பொன்னாமலை (45) என்பது தெரிய வந்தது. மேலும் லாரி ஓட்டுனரும் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தால் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K