இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!

0
37

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு…

 

அரக்கோணம் இரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சென்னை மாவட்டம் ஆழ்வார்பேட்டையில் 25 வயதான பிராங்களின் என்ற வாலிபர் வசித்து வந்தார். அரக்கோணத்தில் இரயில் நிலையத்தின் அருகே உள்ள ஏ.வி.ஏம் சர்ச் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிராங்களின் வந்தார்.

 

அரக்கோணம் இரயில் நிலையத்தில் பழைய பிளாட்பார்ம் ஒன்று உள்ளது. அரக்கோணம் இரயில் நிலையத்தின் 8வது பிளாட்பார்ம் ஆகும். இந்த பிளாட்பார்மில் செங்கல்பட்டு வழியாக செல்லும் இரயில்கள் அனைத்தும் நின்று செல்லும். ஆனால் தற்பொழுது இந்த பழைய 8வது பிளாட்பார்ம் பயன்படுத்தாமல் உள்ளது.

 

இந்த பழைய பயன்படுத்தாத 8வது பிளாட்பார்மில் நேற்று(ஆகஸ்ட்6) இரவு பிராங்களின் அவர்கள் நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த மர்ம கும்பல் பிராங்களின் அவர்களை  சரமாரியாக வெட்டத் தொடங்கினர். அந்த மர்ம கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடிய பிராங்களின் அவர்களை விடாமல் துரத்திய அந்த கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தினர். பலத்த காயம் அடைந்த பிராங்களின் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். பிராங்களின் அவர்களின் அலறல் சத்தம் கேட்ட பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் காவல் துறையினர் படுகாயம் அடைந்த பிராங்களின் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பிராங்களின் அவர்களை அழைத்துச் சென்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிராங்களின் அவர்கள் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஆகஸ்ட் 7) உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இது குறித்து காவல் துறையினர் “பிராங்களின் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரக்கோணத்தில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு வந்தார். மேலும் அரக்கோணத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். பிராங்களின் அவர்களுக்கும் சென்னையை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாகவும் பிராங்களின் அவர்கள் அரக்கோணத்தில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கினார். இதனை அறிந்த சென்னையை சேர்ந்த கும்பல் பிராங்களின் அவர்களை கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.  அரக்கோணம் இரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகிறோம்” என்று கூறினர்.