அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! நான் முதல்வன் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்!

0
196
A strange announcement for government school students! The change brought about by the project I am first!
A strange announcement for government school students! The change brought about by the project I am first!

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! நான் முதல்வன் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்!

திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் என தேர்தல் வாக்குறுதியாக வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை  தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா  பயண சீட்டு வழங்கும் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1௦௦௦ மற்றும் நான் முதல்வர் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் நான் முதல்வன்  திட்டத்தை செயல்படுத்தியது.

அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி தேர்வு செய்து படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் களப்பணி என்று கல்வித்துறை அதற்கு பெயரிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களை அருகில் இருக்கும் கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று மேற்படிப்பு தொடர்பான விளக்கங்கள் மற்றும் கல்லூரி வளாகங்கள் அதன் செயல்பாடுகள், கலையரங்கம், நூலகம், விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் போன்றவற்றை சுற்றி காண்பிக்கும் வகையில் கல்லூரி சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் செல்ல பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஒவ்வொரு அரசு பள்ளியில் பயிலும் சுமார் 10 முதல் 15 மாணவர்களை தேர்ந்தெடுத்து இரண்டு ஆசிரியர்கள் அவர்களை வழிநடத்தி இந்த கல்லூரி சுற்றுலா செல்கின்றனர்.தற்போது வரை சென்னையில் மட்டும் மொத்தம் 56 அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 600 மாணவர்கள் இந்த கல்லூரி சுற்றுலாவில் பங்கேற்றுள்ளனர் என கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து இதுகுறித்து பயனடைந்த மாணவிகள் காவியா,காமேஸ்வரி மற்றும் நிவேதா கூறுகையில் இது மிகவும் பயனுள்ளதாகவும் உயர்கல்வி படிப்புகள் பற்றி தெளிவு எங்களுக்கு கிடைத்தது. ஒவ்வொரு படிப்பையும் தேர்வு செய்வது பற்றியும், எந்த படிப்புகளை படித்தால் வேலை கிடைக்கும் என்பதை பற்றியும் நாங்கள் தெரிந்து கொண்டோம் என கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K