நேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிரடியாக 18 ஆயிரத்து 819ஐ அடைந்தது. நேற்றைய நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தே காணப்பட்டது. இதன்படி நேற்றைய நிலையில் 17 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1750 குறைந்திருக்கிறது.
இந்நிலையில் இன்று புதிதாக மொத்தம் 17 ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி மத்திய சுகாதார அமைச்சகம் கூறிய தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனாவின் எண்ணிக்கை 4,34,86,326 ஆகா எட்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,25,168 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,684 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,28,51,590 90 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 1,09,568 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை 1,97,84,80,015 நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் 4,12,570 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை உள்ள மொத்தம் 86,32,90,209 கொரோனா மாதிரிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றை விட கொரோனா தொற்று இன்று சற்று அதிகமாக பதிவாகியுள்ளது என கூறப்படுகிறது.