மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்!

0
125
A schoolgirl commits suicide again! Execute that the last is me!
A schoolgirl commits suicide again! Execute that the last is me!

மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தற்கொலை! கடைசி என்பது நான்தான் என்பதை நிறைவேற்றுங்கள்!

கோவையில் பிரபல தனியார் பள்ளி 11 ம் வகுப்பு மாணவி செய்த தற்கொலையையே இன்னும் நம்மால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதற்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் என்னதான் நடக்கிறது. கல்வி கற்க தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று பெற்றோர் அவர்களையே கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவரது மகள் 17 வயதான பெண். வெண்ண மலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து குடும்பத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துள்ளனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்துள்ளார் என தாய் நினைத்து, அவரை அழைத்து சமாதானப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அந்த மாணவியின் தாய் ஜெயந்தி வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரை பதிவு செய்த போலீசார் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர்.

அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் என்ன காரணத்திற்காக  தற்கொலை செய்து கொண்டார் என்று அந்த மாணவியின் அறையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின் அந்த சோதனையின் முடிவில் அவர்களுக்கு அந்த மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதை தற்போது போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் அந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகும் கடைசி மாணவி நானாகத்தான் இருக்க வேண்டும் என்றும், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் யார் என்பதை சொல்ல எனக்கு பயமாக இருப்பதாகவும் எழுதியுள்ளார். இந்த பூமியில் நீண்ட நாள் வாழ ஆசைப்பட்டேன். ஆனால் இப்போ பாதியிலேயே விடை பெறுகிறேன். இன்னொரு தடவை இந்த உலகத்தில் வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்.

பெரியவள் ஆனதும் நிறைய பேருக்கு உதவி செய்ய நினைத்தேன். ஆனா இப்போ முடியாது. ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மணிமாமா, அம்மு, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். . ஆனா நான் உங்க கிட்ட சொல்லாம விடை பெற போகிறேன். என்னை மன்னிச்சிருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன முடிவு எடுத்து சாக கூடாது.சாரி என்று அந்த கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.