தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்!

0
101
A ninth grade student who killed his mother! Sensational incident!
A ninth grade student who killed his mother! Sensational incident!

தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்!

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்துவருபவர் அருட்செல்வன்.இவர் கட்டிட ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வருகின்றார்.இவருடைய மனைவி யுவராணி.இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இவர்களுக்கு 14வயதில் மகன் உள்ளார்.இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார்.

மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டுக்கு வந்திருந்தார்.அப்போது யுவராணி மாணவனிடம் படிக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.அதற்கு அந்த மாணவன் நான் இனி விடுதிக்கு செல்ல போவாதில்லை  என வாக்குவாதம் செய்துள்ளார் இதனையடுத்து அன்று நள்ளிரவு தூக்கத்தில் அந்த மாணவன் விழித்துள்ளான் அப்போது ஆத்திரத்தில் உறங்கி கொண்டிருந்த தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளான்.

அதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த யுவாரணியை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே யுவராணி உயிரிழந்தார்.மேலும் தாயை தாக்கிய மாணவன் அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.மேலும் இந்த சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் தப்பி ஓடிய மாணவனை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று புங்கம்பள்ளியில் இருந்து வின்னம்பள்ளி நோக்கி மாணவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் மாணவனை கைது செய்தனர்.இதனையடுத்து அந்த சிறுவனை கோவை உள்ள கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

படிப்பில் ஆர்வம் இல்லாத நிலையில் இருந்த மாணவனை படிப்பில் கவனம் செலுத்த பெற்றோர் தொடர்ந்து அறிவுரை வழங்கியுள்ளனர்.அதனால் மனபாதிப்பில் இருந்த அந்த சிறுவனை சில நாட்களுக்கு முன்பு மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவு செய்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K