உருவாகிவிட்டது புதிய புயல்! இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து நிலவிவரும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரி காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகின்ற ஜூன் 10-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.
இதேபோல் தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பிபோர்ஜோய் என பெயரிட்டுள்ளது. இதற்கு ஆபத்து என்பது பொருளாகும்.
இந்த புயலானது மேலும் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதோடு மட்டுமல்லாமல் கேரள முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை மிகவும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.