கள்ளக் காதலனுடன் அஜால் குஜால் செய்த மனைவி! அடங்கமாட்டியா? எத்தனை முறை சொல்லட்டும்? பிறகு?

0
117

மத்தியபிரதேச மாநிலத்தில் கள்ள காதலனுடன் ரூமில் அஜால் குஜால் செய்யும் பொழுது திடீரென உள்ளே வந்த கணவர் அதிர்ச்சி அடைந்து இரண்டு பேரையும் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் வயது 34. இவரது மனைவி அனிதா. அவருக்கு 28 வயது. இருவரும் தசங்கா என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அனிதாவுக்கும் அங்கே உள்ள ஒரு இளைஞர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விசயம் லோகேஷ்க்கு தெரிய வரவே இருவரையும் அழைத்து கண்டித்து உள்ளார். அடங்காத இருவரும் மறுபடியும் சந்தித்து பேசி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து லோகேஷ் வந்துவிட அந்த கோலத்தை கண்ணால் பார்த்து விட்டார்.

பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அருகில் உள்ள கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே பலி ஆகினர்.

 

அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் கள்ள காதலனின் உடலை மட்டும் எடுத்து கொண்டு போய் கண்ணை நொண்டி விட்டு சடலத்தை வீசி விட்டார்.

 

பின்னர் மனைவியின் உடலை வீட்டின் வெளியே வீசி, கதறி அய்யோ அனிதா வாயில் இரத்தம் வருகிறது என்ன ஆனது என்று தெரியவில்லை என்று நாடகம் ஆடியுள்ளார். உறவினர்கள் சந்தேகப்பட்டு போலீஸிடம் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்த உண்மை வெளிவந்து உள்ளது. லோகேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

author avatar
Kowsalya