மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன் செய்த செயலால்! மனைவியின் பரிதாப நிலை!

0
74

கிருஷ்ணகிரி கல்லாவி அடுத்துள்ள பள்ளசூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் இவருடைய மனைவி ருக்மணி துணி தைக்கும் வேலைக்கு சென்று வந்தார். தங்கராஜ் போச்சம்பள்ளி சிப்காட்டில் இருக்கும் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

திருமணம் நடந்து 12 வருடங்கள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாததால். அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

மனைவி அழகாக இருந்த காரணத்தால். அவருடைய நடத்தையில் சந்தேகம் அடைந்து எப்போதும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து இருக்கின்றார் தங்கராஜ்.

இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு மனைவியின் மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார் தங்கராஜ்.

குடித்துவிட்டு வந்த காரணத்தால், ருக்மணியும் தங்கராஜ் இடம் வாக்குவாதம் செய்திருக்கின்றார். அதன் பின்னர் இரண்டு பேரும் உறங்கி விட்டனர். ஆனால் சிறிது நேரம் சென்ற பின்பு தூக்கம் கலைந்த தங்கராஜ் விழித்துக் கொண்டார்.

அழகான மனைவியும் அதன் காரணமாக அவர் மீது வந்த சந்தேகமும் தங்கராஜை மாறிமாறி கோபப்படுத்த, ருக்மணியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டார் தங்கராஜ்.

அதன் பிறகு கல்லாவி காவல்துறையிடம் சென்று தானாகவே சரண் அடைந்து விட்டார் தங்கராஜ்.

சந்தேகத்தாலும், பழக்கத்தாலும், ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டது அந்த கிராமத்தையே அதிர வைத்திருக்கின்றது.