சென்னையில் கால் சென்டர் நடத்தி பண மோசடி செய்த கும்பல் கைது!

0
78

கொரோனா தொற்று பெருகி வரும் இந்த நேரத்தில் சென்னையில் போலியாக கால் சென்டர் நடத்தி பணமோசடி செய்த கும்பலை திருவான்மியூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் சாமானிய மக்களை ஏமாற்றி பணமோசடி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து சென்னை அண்ணா சாலையில் போலியாக கால் சென்டர் நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளனர்.இதில் சிக்கிய சரவணன் மற்றும் செல்வகுமாரை விசாரித்ததில் இதில் சம்மந்தப்பட்ட மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.அதன் பிறகு பெருங்குடி மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் கால்சென்டர் நடத்திய ஜகாத், ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி சுமார்
400க்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 2 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.இதனை அடுத்து போலீசார் இவர்களிடம் மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடன் வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.

author avatar
Parthipan K