வித்தியாசமான உல்லாச விருந்து! சிக்கிய பிரபல தொழிலதிபர்!

0
103

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது சிலர் தங்களுடைய மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து நடத்திய நிகழ்வு தான் அது என சொல்லப்படுகிறது. இதற்காக அவர்கள் ஒரு குழுவை போன்று செயல்பட்டு அவ்வப்போது இது போன்ற உல்லாச விருந்து நடத்தியது தற்போது அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இது போன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வந்தது. தற்போது அதுவும் அம்பலமாகி இருக்கிறது. குர்காம் பகுதியைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 30 வயதில் மனைவி இருக்கிறார். டெல்லியில் அடிக்கடி நடைபெறும் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு தொழிலதிபர் தன்னுடைய இளம் மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். இதற்கு மனைவி மறுத்தாலும் விடுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கணவன் மனைவிக்கிடையே தகராறு உண்டாகி வந்தது, ஆனாலும் மனைவியை மிரட்டி அவர் இது போன்ற விருந்தில் பங்கேற்க வைத்தார் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தன்னுடைய சகோதரருடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை வற்புறுத்தி இருக்கிறார். இதனை கேட்டு அதிர்ந்து போன அந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தார், இதனால் அந்த தொழிலதிபர் மனைவியை உடல் ரீதியாக சித்திரவதை செய்தார் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, ஆத்திரமடைந்த அந்தப் பெண்மணி வீட்டிலிருந்து வெளியேறி நடந்த கொடூரம் குறித்து காவல்துறையில் புகார் வழங்கினார். அதன் பிறகு தான் இந்த தகவல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. அதோட அந்த பெண் கூறி புகாரில் என்னுடைய கணவர் என்னை கட்டாயப்படுத்தி டெல்லியில் நடைபெற்ற மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் விருந்துக்கு அழைத்துச் சென்றார்.

இதன் காரணமாக, நான் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டேன் புகார் வழங்கினால் நான் வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடத்தார் என் கணவர் எனக்கூறியிருக்கிறார்.

ஆகவே கணவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்த பெண்மணி இது குறித்து தொழிலதிபர் மற்றும் அவருடைய சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.