வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா?

0
133
A couple living near Vandavasi drinking only rain water!..Is this still the case at this age?
A couple living near Vandavasi drinking only rain water!..Is this still the case at this age?

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா?

வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கோதையான்.இவருடைய வயது 76.இவரது மனைவி ராணியம்மாள் வயது 72. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.இவைகளின் பிள்ளைகள் நன்றாக வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் சொந்த விவசாய நிலங்களில் தனி வீடு ஒன்று கட்டி அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் குடிப்பதற்கும் மற்றும் சமையல் செய்வதற்கும் மழைநீரையே பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அந்த தம்பதியிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது, நாங்கள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே கிணற்று நீரையோ, ஆழ்துளைக் குழாய் நீரையோ மற்றும் காவேரி ஆற்று நிறையோ உபயோகித்ததே இல்லை. இயற்கையில் கிடைக்கும் மழைநீரை மட்டுமே சேமித்து உபயோகித்து  வருகிறோம்.

எப்போதெல்லாம் மழை வருகிறதோ அப்போதெல்லாம் பேரல்கள்,கேன்கள்,அண்டாக்கள், சிறுசிறு பாத்திரங்கள் என அனைத்து பொருட்களிலும் மழைநீரை சேமித்து வைத்துக் கொள்வோம்.இதன்பின்னர் கூரையிலிருந்து  வரும் சுத்தமான நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்வோம்.

பின்னர் அந்த நீரை நன்றாக வடிகட்டி காய்ச்சி பயன்படுத்திக் கொள்வோம். மழைநீரை எவ்வளவு நாள் சேமித்து வைத்தாலும் அதில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் உருவாகாது.மழைநீரை மட்டுமே உபயோகிப்பதால் உடல்நல பாதிப்பு எதுவும் இல்லாமல், மருத்துவர்களை அணுகாமல் வாழ்ந்து வருகிறோம். எங்களை பார்த்து அருகிலுள்ள வீட்டினர் மழைநீரை சேமித்து உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஎன்றார்கள்.மழைநீரை அக்காலத்தில் உயிர்நீர் என்பர். இறைவனின் அற்புத படைப்புக்களில் ஒன்றான மழைநீரை சேமித்து பயன்படுத்தும் இந்த தம்பதி தங்கள் கிராமத்துக்கே பெருமை சேர்த்துள்ளனர் என்று அந்த கிராமத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.மேலும் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றார்கள்.எனவே இன்றைய கால மக்களும் இதனை கருத்தில் கொண்டு நோய் இல்ல உலகை படைக்க வேண்டும்.

author avatar
Parthipan K