சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! 

0
115
A collection of murder incidents that made Chennai scream!!
A collection of murder incidents that made Chennai scream!!

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!!

தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக ரியல்எஸ்டேட் அதிபர், அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக பாஜக நிர்வாகி சங்கர், நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்காக பழி தீர்ப்பதாக  விசாரணையில் கூறியுள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஆதம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன் பணம் மற்றும் தங்க ஆபரணங்களுக்காக மூதாட்டியை கொலை செய்த 40 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.

குன்றத்தூரில் விசிக நிர்வாகி அதிஷ் என்பவர் சொத்து தகராறில் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்நிகழ்வு தொடர்பாக அவரது அண்ணன் குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவொற்றியூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடத்தின் போது மது போதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

பூங்காவனபுரத்தை சேர்ந்த சிறார் உள்பட 8 பேரையும் கைது செய்த காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபோதையில் நடந்த தகராறில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இந்த
வழக்கில் ரவுடி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று தரமணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை திருவொற்றியூரில் எம்.ஜி.ஆர் சாலையில் கோழி செல்வம், மனோஜ் ஆகியோர் மதுபானம் வாங்கச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் மனோஜ் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை நேரில் கண்ட முதியவரும் கொலை செய்யப்பட்டார்.