பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன்

0
159
#image_title

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன்

சேலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் கோபமடைந்த உரிமையாளர் அந்த வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்து வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர்

சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு ஓட்டி சென்றார்.

கருங்கல்பட்டி பகுதியில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாததால் இரண்டு சக்கர வாகனம் நின்றுவிட்டது. பலமுறை தனது இருசக்கர வாகனத்தை மணிகண்டன் இயக்கி பார்த்தும் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த மணிகண்டன் தீப்பெட்டியை எடுத்து பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து இரண்டு சக்கர வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதனால் கருங்கல்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து  உடனடியாக தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் மணிகண்டனை தேடிபிடித்து கைது செய்தனர்.