சிறுமியின் அது இருந்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிட்டும்! நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!

0
67

உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக நுரையீரல் வேண்டும் என்ற சாமியாரின் பேச்சைக் கேட்டு 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியைக் கொன்று நுரையீரலை மட்டும் எடுத்துச் சென்ற சம்பவம் அங்கு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் மாவட்டத்தில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக ஆக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் கிடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 1999 ஆம் ஆண்டு பரசுராம் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் குழந்தை பாக்கியம் பெற பரசுராம் மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடியுள்ளார்.

அப்பொழுது அந்த மந்திரவாதி குழந்தை பாக்கியம் பெற வேண்டுமெனில் ஒரு சிறுமியின் நுரையீரல் வேண்டும் அதை வைத்து நான் பூஜை செய்தால் தான் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று அந்த தம்பதியிடம் சொல்லியுள்ளார்.

இதனால் இந்த வேலையை செய்வதற்காக பரசுராமர் அவர்களது உறவினர்களான அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் வேலையை ஒப்படைத்துள்ளார்.

அவர்கள் ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அந்த சிறுமியை கண்டந்துண்டமாக வெட்டி நுரையீரலை மட்டும் தனியாக எடுத்துச் சென்று மந்திரவாதியிடம் ஒப்படைத்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு சம்பந்த பட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் நரபலிக்கு காரணமான பரசுராம் தம்பதியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

author avatar
Kowsalya