தமிழகத்தில் மேலும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று! சுகாதாரத்துறை தகவல்..

0
84

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 114 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் இன்று மட்டும் 5,556 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,154 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 134 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இன்றைய தேதியில் மட்டும் 53,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 69.99% ஆக உள்ளது.

சென்னையில் 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆயிரத்திற்கும் அதிகமாக 1,187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் மொத்தமாக 1,14,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K