மழை நீர் வடிகால் வாய்கள் 50 சதவீதமே நிறைவு பெற்றுள்ளது விரைவாக முடித்திடுக! திமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய கோரிக்கை!

0
63

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கொல்லியங்குணம் நெல்லித்தோப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் அதிக குடிசைகள் எடுக்கின்ற மாவட்டம் விழுப்புரம் கல்வி, வேலைவாய்ப்பில் கடைசி இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஆனால் டாஸ்மாக் விற்பனைகள் மட்டும் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனிக்கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிப்பதற்கு முயற்சி செய்தால் அதனை பாட்டாளி மக்கள் கட்சி அதனை கடுமையாக எதிர்க்கும் விருப்பப்பட்டு ஹிந்தி படித்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் யார் மீதும் திணிக்க கூடாது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

அதேபோல வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கவுள்ளது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வடிகால் பணிகள் 50 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதற்கான வியூகங்கள் 2024 முதல் தீவிரமாக அமைக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய வாசன கட்டமைப்புகள் வியக்க வைப்பவை ஆறுகளில் இருந்து எறிய ஏரிகளுக்கும், அங்கிருந்து சிறிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்வதற்கு நீர் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தனர்.

இந்த பாசன கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டு எடுத்தல், அனைத்து ஏரிகளையும் தூர்வாருதல், கொள்ளிடம் மருதையாற்றில் தடுப்பணைகள் கட்டுதல் போன்ற சோழர்கால பாசன கட்டமைப்புகளை மீட்டெடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 29 மற்றும் 30 உள்ளிட்ட தேதிகளில் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.