42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!

0
86

பள்ளி செல்லும் மாணவர்கள் 45 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆல்வார் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண்ணொருவர், தனது மருமகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவர்களை நிறுத்தினர்.

பின்பு அந்த கும்பல் மருமகளை கட்டிப்போட்டு, அந்த 45 பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பலாத்காரம் காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேரில் 2 பேர் பள்ளி சிறுவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, மருமகளை பலாத்காரம் செய்வது போல வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அந்த பெண் அருகிலிருந்த காவல்துறையிலும் புகார் அளித்தனர் . பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்த அந்த வாலிபர் கூட்டம், திடீரென அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பரப்பியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் ,காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளி 3 பேரை கைது செய்தனர்.அதில் இரண்டு பேர் பள்ளி செல்லும் சிறுவர்கள் என்பதும் ,மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K