தமிழ்நாடு முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்கள் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிப்பு!

0
66

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சையை கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திறந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில், வடசென்னை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, வீராசாமி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி தலைமை இயக்குனர் மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் இதனையடுத்து அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, ஒமைக்ரான், டெல்டா உள்ளிட்டவை வேகமாக பரவிய நிலையிலும் மற்ற நோய்களுக்கான சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படுகின்றது. இன்று காலை கோஷா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வராததால் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ நிலைய அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 80,0000 லட்சம் மதிப்பிலான கைமாற்று அறுவைச்சிகிச்சை கட்டிடம் திறக்கப்பட்டிருக்கிறது. அதி நவீன அறுவை சிகிச்சை அரங்கம் {20 படுக்கைகள்} 2,92, 60,000 மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சுகாண சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கின்ற 1.20 ஒரு லட்சம் சிறு கிராமங்களில் 24000க்கும் அதிகமான கிராமங்களில் தொற்று பாதிப்பு இருக்கிறது. நகரங்களில் 1.27 லட்சம் தெருக்களில் 20 ,000திற்கும் அதிகமான தெருக்களில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் 9,232 தெருக்களில் நோய்த் தொற்று பாதிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 3,787 பகுதிகள் நோய்த்தொற்று காரணமாக, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

அதேபோல தமிழ்நாட்டில் இதுவரையில் 9000 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், நோய்த்தொற்று பாதித்த 94% பேர் வீட்டு கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதன் காரணமாக, கிராமங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தினங்களில் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்கலாம் இதன் காரணமாக, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறியிருக்கிறார்.

நீட் மசோதா குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருக்கிறார்கள். அப்போது அவர் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை கலந்தாலோசிப்பதாக தெரிவித்திருப்பது நல்ல மாற்றம்.

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டை போல தன்னுடைய ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். ஆகவே அமிர்ஷா கேட்கும் போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நல்ல ஒரு பதிலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.