இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்: சவுரவ் கங்குலி

0
74
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது  என்று நடைபெறும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறள்ளது. இதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  இந்தியா விளையாட உள்ளது . டிசம்பர் மாதம் இத்தொடர் நடைபெறுகிறது. இதுதான் இந்தியா கொரோனா வைரஸ்பிறகு விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட்போட்டி ஆகும். அதன்பின் இந்திய அணி நாடு திரும்புகிறது.

இதன்பின் அடுத்த ஆண்டு தொடக்கத்திலே இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையடள்ளது. இது இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி ஆகும் . அதன் பிறகு ஐபிஎல் போட்டி நடக்கும். 2023 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இந்த வருடத்திற்குள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது என்று  கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் எழுதிள்ளது  உள்ளது.
அக்கடிதத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி‘‘உள்ளூர் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அனைத்து முயற்சியும்  நடைபெற்று வருகிறது. சூழ்நிலை சரியாக வரும்போது போட்டி நடத்தப்படும். வீரர்களின் நிலை, பாதுகாப்பு, மேலும் சில விஷயங்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது முக்கியமாகும் தொடர்ச்சியாக நாங்கள் அதை கண்காணித்து கொண்டுவருகிறோம். உள்ளூர் போட்டிகள் தொடங்குவத்துக்கு முன் எதிர்கால திட்டம் குறித்து முறையாக அறிவிக்கப்படும். அடுத்த சில மாதங்களில் கொரோனாவில் இருந்து விடுபடுவோம், உள்ளூர் கிரிக்கெட் சிறந்த முறையில் பாதுகாப்பு, சுகாதாரமக நடைபெறும் என்று நம்புவோம்’’ என்று  கூறியிருந்தார்.
author avatar
Parthipan K