நாயுடன் பாலியல் உறவு கொண்ட அயர்லாந்து பெண்! வழக்கு விசாரணை வந்தது!

0
110

29 வயதான அயர்லாந்து பெண் நாயுடன் உடலுறவு கொண்ட வழக்கு இப்பொழுது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

29 வயதான அயர்லாந்து பெண் 2019 டிசம்பரில் தனது வீட்டில் கலப்பு இன ரோட்வீலர் நாயுடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கு ஜூன் மாதம் டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இன்னும் வழக்கில் அந்த பெண்ணிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வழக்கறிஞர்கள் தேவையான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.

 

செப்டம்பர் 3 ஆம் தேதி, அந்தப் பெண்ணுக்கு எதிராக ஆதாரப் புத்தகத்தை வழக்கறிஞர்கள் பூர்த்தி செய்ததாக நீதிபதி ட்ரெசா கெல்லிக்குத் தெரிவிக்கப்பட்டபோது, ​​வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் தொடங்கி இருக்கிறது.

 

எனினும், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆதாரங்களின் புத்தகம் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று அவரது வழக்கறிஞர் டோனி கோலியர் கூறியுள்ளார்.

 

இந்த வழக்கை இம்மாதம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, குற்றவாளியை தொடர்ந்து ஜாமீனில் வைக்க உத்தரவிட்டு உள்ளார் என சொல்லபடுகிறது.

 

அடுத்த விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணுக்கு எதிரான புத்தகம் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் சர்க்யூட் கோர்ட்டுக்கு விசாரணைக்கு அனுப்பப்படலாம், இது மிகவும் கடுமையான தண்டனையாக அந்தப் பெண்ணிற்கு அளிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளனர்..

 

இந்த வழக்கு ஜூன் மாதத்தில் டப்ளின் மாவட்ட நீதிமன்றத்தின் முன் வந்தபோது, ஊடகங்களும் மற்ற மக்களும் அந்தப் பெண்ணை அடையாளம் காண்பதை தவிர்க்க பல்வேறு இடைக்கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

 

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் அந்தப் பெண்ணின் அடையாளத்தை வெளி காண்பது அவளுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். அதனால், ஊடகங்கள் மற்றும் பொது மக்களின் வெறுப்பு அந்த பெண்ணின் மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் . இது சட்டத்தின் உரிய செயல்முறையை பாதிக்கும் மற்றும் நியாயமான விசாரணைக்கு அவளது உரிமையை தடுக்கலாம், என்று நீதிமன்றத்திடம் கேட்டு ஒரு சில கட்டுப்பாடுகளை விண்ணப்பித்து வாங்கியிருந்தார். நீதிபதி இப்போது இந்த தற்காலிக கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளார். அடுத்த விசாரணையில், இவை மேலும் தொடர வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

 

author avatar
Kowsalya