நடுநடுங்க வைக்கும் வருடமாக 2021 மாறலாம்: நோஸ்ட்ராடாமஸ்!

0
187

2020-ம் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளுக்கே இன்னும்  தீர்வு கிடைக்காத நிலையில் 2021 ஆம் ஆண்டு  2020 ஆம் ஆண்டைவிட பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் என நாஸ்டர்டாமஸ் அவர்களின் கருத்து கணிப்பு கூறுகிறது. அவரின் கருத்து கணிப்புப்படி பார்த்தால் 2020 ஆம் வருடம் வெறும் டிரைலர் போலவும்,2021 ஆண்டில்தான் முழுப்படமும் மறைந்து இருப்பது போலவும் தெரிகிறது.

பிரெஞ்ச் தத்துவ ஞானியும் தீர்க்கதரிசனமான நாஸ்டர்டாமஸ் 500 வருடங்களுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப்போவதை தனது கருத்துக் கணிப்புகள் மூலம் ஒரு புத்தகமாக பதிவிட்டுள்ளார். இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் சிலரின் மனதிற்கு வேடிக்கையாக இருந்தாலும் பல அறிவியலாளர்கள் இதனை நம்புகின்றனர் அந்த வகையில் இவரின் கருத்து கணிப்புகள் பலவும் உண்மை ஆகியுள்ளன அந்த வரிசையில் ஹிட்லரின் எழுச்சி மற்றும் இரண்டாம் உலகப் போர் போன்ற பல நிகழ்வுகள் அடங்கும்.

இதில் 2021 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளாக நாஸ்டர்டாமஸ் அவர்கள் கூறியுள்ள சில கருத்து கணிப்புகளை பார்க்கலாம்! ஜாம்பி தாக்கி பேரழிவு ஏற்படும்: ஜாம்பி என்ற வார்த்தையை நாம் திரைப்படங்களில் மட்டுமே கேள்வி பட்டிருப்போம் ஆனால் நாஸ்டர்டாமஸ் அதனை 500 வருடத்திற்கு முன்பே இதனால் பேரழிவு ஏற்படும் என தனது குறிப்பில் கூறியுள்ளார். அதாவது பாதி இறந்த சில மனிதர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் தயாரித்த உயிரியல் ஆயுதம் உலகை அழித்து விடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சம்: கடந்த பல வருடங்களாக இவ்வுலகத்தில் பெரும்பாலான இடங்களில் பஞ்சம் பெருக்கு அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நாஸ்டர்டாமஸ் அவர்களின் கருத்துப்படி மழை, ரத்தம் ,பால், பஞ்சம் மற்றும் தொற்று ஆகியவை உலகை அழிக்க மிகப்பெரிய காரணங்களாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதில் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்கவை மற்றும் பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலேயே உணவுக்காக கையேந்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சிறுகோள்களின் தாக்குதல்:” A long trail of sparks” என்பது தீப்பொறிகளின் நீண்ட பாதை என்பதாகும். அதாவது ஒரு பெரிய சிறுகோள் பூமியைத் தாக்கக் கூடும் என அவர் மதிப்பிட்டுள்ளார் இந்நிலையில் கிறிஸ்துமஸ் அன்று ஒரு சிறிய கோள் பூமியை தாண்டி சென்றது குறிப்பிடத்தக்கது, இதனால் வரப்போகும் காலங்களில் இனி என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இவரின் கருத்து கணிப்புகள் சில நம்ப முடியாதவையாக இருந்தாலும், உண்மையா? இல்லையா? என்பதை வரப்போகும் காலம் தான் உணர்த்த வேண்டும்.

 

 

author avatar
Parthipan K