பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது!

0
156
#image_title

பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது!

பெரம்பலூரில் அருகே பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் அருகே பிளஸ்-1 தேர்வு எழுதி முடித்துள்ள 16 வயது மாணவிக்கு, 31 வயதுடைய அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாணவியின் உறவினர் கடந்த 12-ந்தேதி மாவட்ட குழந்தை உதவி மையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை மீட்டு குழந்தைகள் தொண்டு அறக்கட்டளையில் தங்க வைத்து அங்கு மாணவியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் கிராமத்தில உள்ள பெந்தகொஸ்தே திருச்சபையின் அருள்தந்தை (பாதிரியார்) வேலாயுதம் ஸ்டீபன் (53) என்பவர் வீட்டில் தங்கியிருந்து, வயல் வேலை செய்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவியை பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

இதனை மாணவி தனது தந்தையிடம் தெரிவித்த போது தந்தை அதை நம்பாமல் தன் மகளை கண்டித்துள்ளார். பின்னர் மாணவி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் தேர்வு முடிந்து மாணவி பெரம்பலூர் அருகே உள்ள மாவலிங்கை கிராமத்தில் தனது மாமா வீட்டில் வந்து தங்கி உள்ளார்

மாணவியை அவருடைய மாமா மகன் தர்மதுரை (31) என்பவர் காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் மாமா வீட்டில் இருந்த மாணவியை 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று மாமா மகன் குடும்பத்தினர் கூறி, மாணவியை அங்கேயே தங்க வைத்துள்ளனர்.

கடந்த 8-ந்தேதி மாணவியை, மாமா மகன் தர்மதுரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் 2 பேருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் நேற்று முன்தினம் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன், மாணவியின் தந்தை, மாமா மகன் தர்மதுரை ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் , தர்மதுரை ஆகிய இருவர் மீதும் போஸ்கோ வழக்கு பதிவு செய்து நேற்று இரவு கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

author avatar
Savitha