விஷச் சாராயத்தால் மேலும் 2 பேர் சாவு. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

0
88

பஞ்சாபில் விஷச் சாராயத்தால் நாளுக்கு நாள் உயரும் பழி எண்ணிக்கை.

 

கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபிலுள்ள டான்டரன் மாவட்டத்தின் பகுதியில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த நிலையில் அங்குள்ள உதவி கமிஷனர் குல்வந்த் சிங் கூறும்போது, டான்டரன் மாவட்டத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அமிர்தசரஸில் பதினோரு பேரும், குருதாஸ்பூரிலுள்ள பாட்டியாலாவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

இதில் விஷ சாராயத்தில் இறந்த குடும்பங்களில் உள்ள நபர்கள் கூறும்போது அவர்கள் மாரடைப்பால் இறந்ததாக கூறுகிறார்கள். மேலும் இறந்த நபர்களை பற்றிய தகவல்கள் தராமல் மறைக்கின்றனர் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

மேலும் இறந்தவர்களை அந்தப் பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே இறந்தவர்களின் உடலை எரித்து விடுகின்றனர். இதனடிப்படையில் விஷச் சாராயம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் பத்து பேர் கைதாகியுள்ளனர்.

author avatar
Parthipan K