19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?

0
82
19 year old student uses cell phone for a long time Parental consolation?
19 year old student uses cell phone for a long time Parental consolation?

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?

இந்த கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வருமோ? என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் நோய் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் முழு நேர ஊரடங்குகளை செயல்படுத்தி வருகிறது.

இந்த 1 வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமே பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருப்பது பெரியோர்களுக்கு மட்டும் அல்ல பிள்ளைகளுக்கும் தான் என்பதை நாமும் உணர வேண்டும்.

இந்த கொரோனா கஷ்ட காலம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அனைவரும் சேர்ந்து தனித்தனியாக வீட்டிலேயே கூட்டு ப்ரார்த்தனை செய்வதை தவிர வேறு வழி இல்லை.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் போதும்மணி இவருடைய மனைவி பத்மா தேவி இவர்களுடைய பெண் மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் வயது 19 ஊரடங்கு காலம் என்பதால் தற்போது அவர் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் மாணவி செல்போன் மோகத்தில் மூழ்கி உள்ளார்.

இதனால் அவர் அடிக்கடி செல்போனை உபயோகித்து வந்ததால் மாணவி மற்றும் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர்களிடம் மாணவி அடிக்கடி சண்டையிட்டதால் மாணவி வீட்டில் சாப்பிடாமலே இருந்து வந்துள்ளார்.

மேலும் செல்போனை உபயோகித்துக் கொண்டு இருந்ததால் கோபமடைந்த பெற்றோர்கள் மாணவியை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் பெற்றோர்கள் இல்லாத சமயம் பார்த்து தன்னுடைய உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்து புகை வர தொடங்கியவுடன் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து பார்த்த பொழுது வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து அதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால் மாணவியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.