16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

0
83

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று இளைஞர் அந்த சிறுமையை ஆசை வார்த்தை கூறி மஹிம் என்ற கிராமத்தில் இருக்கும் ஆள் நடமாட்டமல்லாத பங்களாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

அங்கு சிறுமியை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவனுடைய கூட்டாளி 7 பேர் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.பிறகு அந்த பங்களாவிலிருந்து அந்த சிறுமியை அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று மீண்டும் 8 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு தொடங்கி மறுநாள் காலையில் 10 மணி வரை அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் அந்த 8 மனித மிருகங்கள்.தனக்கு நேர்ந்த இந்த வன்கொடுமையை குறித்து அச்சிறுமி காவல்துறையில் புகார் அளித்தார்.புகாரின் பெயரில் காவல்துறையினர் அந்த எட்டு நபர்களையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
Pavithra