2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை! 

0
106
#image_title

2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை! 

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் சுமார் 1558 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக டிஜிபி உறுதி செய்துள்ளார்.

இது பற்றிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக சாராய வேட்டை நடத்தப்பட்டது. இதில் சுமார் 4943 லிட்டர் சாராய பேரல்கள் கைப்பற்றப்பட்டதுடன் 1558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அதிரடியாக நடத்தப்பட்ட சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் காவல்துறையினரால் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடத்தப்பட்ட  சாராய வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 4943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர் கள்ளும்  இதனுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கரவாகனங்களும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த 2023ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில் சுமார் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் இந்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4,534 பெண்களும் அடக்கம்.  இந்த ஆண்டு இதுவரையிலும் 255,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.  

மேலும்  கள்ளசாராயம் கடத்துவதற்கு பயன்டுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டர் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.