காதலனுடன் உல்லாசமாக வாழ பெற்ற மகளை பலியாக்கிய தாய்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்..!

0
93

தாயே தனது மைனர் பெண்ணை காதலுனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றவர்கள் தான் முதலில் துடித்து போவார்கள். ஆனால், சில பெற்றவர்கள் தங்களின் இச்சைக்காக பெற்ற குழந்தைகளை வதைக்கும் சம்பவமும் சில இடங்களில் அரங்கேறி வருகிறது. இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 36 வயது பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த பெண்ணுக்கும் அவரது தூரத்து உறவினரான 28 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த வாலிபருக்கு தனது 15 வயது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அந்த பெண் தனது மகளிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுமி மறுக்கவே பெற்ற மகள் என்றும் பாராமல் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி கடந்த 6 ம் தேதி அந்த சிறுமிக்கும் இளைஞருக்கும் அங்குள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும், சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்தியதோடு அந்த வாலிபரும் சிறுமி என்றும் பாராமல் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி இது குறித்து தனது தோழியிடம் பகிர்ந்துள்ளார்.

இதனை கேட்ட சமூக ஆர்வலர் ஒருவர் இந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த அவலத்தை கண்டறிந்து அந்த பெண்ணையும் வாலிபரையும் போக்சோ, குழந்தைகள் திருமணத்தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலனுக்காக பெற்ற மகள் சிறுமி என்றும் பாராமல் அவருக்கு திருமணம் செய்து வைத்தோடு வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட தாயே வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.